பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

47


பொறுமை இழந்து, கிசுகிசுக்கத் தொடங்கினார்கள். மணமகளோ தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறாள். மணமகனை அழைத்து வருவதற்கு நண்பன் ஒருவன் விரைந்து சென்றான். -

மணமகனோ தமது ரசாயன சோதனைக் கூடத்தில், திரவங்களை ஊற்றிக் கொண்டும் வடித்துக் கொண்டும் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்.

உடுத்தியிருந்த உடையோடு, அவசரம் அவசரமாக ஆலயத்துக்கு அழைத்துவரப்பட்டார் மணமகன். திருமணம் இனிதாக நிறைவேறியது. தன்னுடைய திருமணத்தை மறந்து, எல்லோரையும் வியப்படையும்படி செய்தவர் யார்?

அவர்தான் லூயி பாஸ்டியூர்! வெறிநாய் கடிக்கு மருந்து கண்டு பிடித்து, மனித குலத்துக்கு அளித்த சிறப்பு மிக்க விஞ்ஞான நிபுணர்.

பாலைக் கெட்டுப் போகாமல் வைப்பதற்கு வழி வகைகளை வகுத்துக் கொடுத்தவரும் அவரே!



(51) விடாக் ண்டரான விஞர்



தத்துவ மேதை ஜேம்ஸ் டூவர்ட் மில்லும் கவிஞர் கோல்ரிட்ஜும் ஒரு சமயம் வெகு நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.