பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

79


கதாசிரியர் வான் லோனின் நண்பர் 'போஸ்ட்' பத்திரிகாசிரியருக்கும் பழக்கமானவர். அவர் அந்தக் கதையைப் 'போஸ்டில்' பார்த்ததும், பத்திரிகாசிரியருக்கு ஒரு கடிதம் எழுத, "அது சரி, அந்தக் கதையை நீங்கள் வான் லோனிடம் நேரடியாகவே வாங்கியிருக்கலாமே, இப்படி ஏன் செய்தீர்கள்?" என்று கேட்டிருந்தார்.

அது முதல் கதாசிரியர் வான் லோனின் கதைகளை 'போஸ்ட்' ஆசிரியர் நேரடியாகவே அவரிடமிருந்து வாங்கிக் கொள்ளத் தொடங்கி விட்டார்.

'போஸ்ட்' பத்திரிகைக்கும் வான் லோனுக்கும் நீண்ட காலத் தொடர்பும் ஏற்பட்டது.



(86) ற்றொருவர் ங்கே?



பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒரு நாள் குதிரைப் பந்தயத்துக்குப் போயிருந்தார். .

அங்கே அவருடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தார். நண்பர் அவரைப் பார்த்ததும், பரபரப்போடு, “கையில் இருந்ததையெல்லாம் தோற்றுவிட்டேன். ஊருக்குத் திரும்பிப் போக ஒரு டிக்கெட் வாங்கித் தர இயலுமா?” என்று கேட்டார்.

"நான் கூடத்தான் இன்று எவ்வளவோ தோற்று விட்டேன். எனக்கும் உனக்குமாக இரண்டு டிக்கெட் வாங்க இயலாது. ஒன்று செய்யலாம். நான் உட்கார்ந்திருக்கும் இடத்துக்குக் கீழே நீ மறைந்து கொள்; என் காலால் உன்னை