பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோவிந்தையார் இலம்பகம்27



“தம்பீ! இதைக்கேள்; கேட்டபின் மறந்துவிடு; உன்னிடம் சொல்லத் தேவையில்லை; எனினும் சொல்லாமல் இருக்க முடியவில்லை; நாங்கள் கொடுங்கோன்மை மிக்க கட்டியங்காரன் ஆட்சியில் அகப்பட்டுக் கொண்டோம். பால் பொங்கிய இந்த நாட்டில் இப்பொழுது வறுமை குடிகொண்டுவிட்டது; நீர் நிறைந்த நாடு இது, அதனை வளைப்பதே நியதியாகக் கொண்டு வாழ்கிறான். இந்தக் கட்டியங்காரன், சச்சந்தன் அவன் ஒரு அரிச்சந்திரன்; அவன் மனைவி சந்திரமதி சுடுகாட்டில் தன் மகனை விற்று விடடு யாருக்காவது அடிமையாக இருக்க வேண்டும். அந்தச் சுந்தரி பெற்ற சுதந்திரன் இன்று எங்காவது வளர்ந்து கொண்டு இருக்க வேண்டும்; உன்னைப் பார்க்கும்போது அவன் நினைவுதான் எங்களுக்கு வருகிறது; ஏறக்குறைய உன் வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறோம். நிச்சயம் அவன் வளர்ந்து தந்தை இழந்த நாட்டை மீண்டும் பெறுவான் என்று நம்புகிறோம். அவன் ஒருவன்தான் இவனை வெல்ல முடியும். ஏன் என்றால் அவனுக்கு நாட்டு மக்கள் தக்க ஒத்துழைப்புத் தருவார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த நம்பிக்கை இருக்கிறது; காரிருள் என்றும் வானத்தை மூடிக் கொண்டு இருக்க முடியாது. கொடுங்கோல் மன்னர்கள் நீடித்து இருந்தார்கள் என்று சரித்திரம் பேசியதே இல்லை; ஏதோ உன்னைப் பார்த்ததும் இந்த எண்ண அலைகள் எழுந்து மோதுகின்றன. உன்னிடம் இதைச் சொல்ல வேண்டும் போல் இருந்தது; ஏன் இவன் இதெல்லாம் பேசுகிறான் என்று நினைக்கலாம்; மன்னித்துவிடு; அதிகம் பேசி இருந்தால். இது பொது விஷயம், நாட்டு அரசியல்; இனிச் சொந்த விஷயத்துக்கு வருகிறேன்.”

“நாங்கள் இடையர் குலத்தில் பிறந்தவர்கள்; கண்ணன் யாம் வழிபடும் கடவுள்; அவனுடைய பெயரைத் தான் எனக்கு வைத்தார்கள். கோவிந்தன் என்று என்னை