22 திருக்குறள் விளக்கு
குரல் ஆ : இரண்டு கோடுகளைக் குறுக்கே சந்திக்கும் படி போட்டுச் சந்திக்கும் இடமே புள்ளி என்று சொல்வார்கள். - .
குரல் அ : அதுபோலத்தான் நுட்பமான ஒன்றைத் திட்பமான சூழ்நிலைகளைக் காட்டிப் புலப்படுத்துவது கவிஞன் திறங்களில் ஒன்று. இதோ இந்தக் காட்சியைப் பார்க்கலாம். - --
- |மாற்றம்.)
★
ஒரு குரல்: பக்கத்து வீட்டுக்காரனுக்கு இந்த ஆண் டில் இருபதினாயிரம் ரூபாய் லாபம் வந்ததாமே?
மறு குரல் : ஆமாம்; அதற்கு மேலும் வந்ததாகச் சொல்கிறார்கள்.
முன்னவர் : அப்படியா? இவ்வளவு பணத்தை அவன் மட்டும் அடைந்தானே! எனக்குக் கிடைக்க வில்லையே! அதைக் கேட்கும்போதே எனக்கு என் னவோ செய்கிறதே! . :
மறு குரல் : உமக்கு என்ன ஐயா குறைவு ? எதற்காக இத்தனை பொறாமைப்படுகிறீர்?
முன்னவர் : அவனுக்குக் கிடைத்தது எனக்குக் கிடைக்காமல் போனது குறையல்லவா?
(மாற்றம்.)
- ★ -
குரல் அ: அந்த வீட்டில்-ஆம் பொறாமைக்காரனாகிய அவனுடைய வீட்டில்-என்ன நிகழ்கிறது தெரி யுமா? . -
(மாற்றம்.)