பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஊர்வ சுகதே ஊர்வ சுகதே ஊர்வ சுகதே ஊர்வ சுகதே ஊர்வ. சுகதே கவியின் கனவு ஒகோ! குற்றம் சாட்டவில்லை, குறைதான் கூறினர்களோ, உம், அடக்கமும் நடத்தையு மில்லாதவர்களெல்லாம் கலையைக் கொலை செய்கிறார்களென்று சற்று முன்னதாகச் சபை யில் நீர் பேசவில்லை? - மகாராணியாகிய தாங்கள் அடக்கமும் நடத்தை யும் கொள்ளவேண்டுமென்று நான் கூற வில்லையே, அம்மா! பின் யாருக்காகச் சொன்னிர்கள்? நடத்தையிலே நம்பிக்கையுள்ள கலைஞர்களுக்கு. அப்பொழுது நான் கலைவாணியில்லையா? இல்லையென்று நான் ஒருபோதும் சொல்ல வில்லையே, அம்மா. வருந்தி முயன்றாலும் வான்கோழி வண்ண மயில் ஆவது கடினம், மகாராணி. - உம் என்னைவிடக் கயிைல் தேர்ச்சி பெற்ற வர்களை உமதனுபவத்தில் வேறு யாரையேனும் கண்டதுண்டா? விபரீதமான - வேண்டாத இக்கேள்விக்கு விடை கூற என்னால் முடியவில்லை.

கேட்ட கேள்விக்கு விடை கூற முடியாத

வீரர் நீர், கலைகளைப் பற்றி மிகத் தெரிந்தவர் போல் பேசி, என் கண்ணியத்தைக் குறைக்க முயன்றீரோ? மகாராணி, ஒரு பெண்ணிடம் கோபத்தைக் காட்டுவது கேவலம் என்பதால், உம்மிடம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கிறேன். உம்மைப் பற்றி உமக்குத் தெரிய வேண்டுமானால், நம் நகரில் நடக்கும் ஒரு நாடகத்துக்குச் சென்று பாரும். அவர்கள் பாடும் ஒரு பாடலைக்