பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாரா. நாச்சியப்பன் 53

குளத்தில் நாளுக்கு நாள் தண்ணீர் வற்றிக் கொண்டே வந்தது. செல்வனும் செல்வியும் வரும் போதெல்லாம் அந்த நீராம்பல் பூவைப் பார்க்காமல் போக மாட்டார்கள். அதுவும் தண்ணீர் இறங்ச இறங்கத் தானும் இறங்கிக் கொண்டே வந்தது கடைசியில் குளம் மிக மிக வற்றிச் சேறும் சகதியுமாகி விட்டது. அப்போதும் அந்த ஆம்பல் பூ அந்த சகதிக் குழம்பின் மேல்தான் நின்றது. உயரமாக நீட்டிக் கொண்டு நிற்கவில்லை.

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மழை பெய்யாவிட்டால், குளம் வறண்டு போகும் என்று பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். குளம் வறண்டு போனால், ஆம்பலும் கருகிப் போகுமே என்று செல்வனும் செல்வியும் வருந்தினார்கள்.

அன்று ஒருநாள் இரவு மழையடித்து ஊற்றியது. அந்த மழையில் குளம் நிரம்பி விட்டது. ஐயோ, பாவம் ! குளத்தில் இருந்த பூ தண்ணீருக்குள் அமுங்கி அழுகிப் போயிருக்கும் என்று குழந்தைகள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் மறுநாள் காலையில் குளக்கரைக்கு வந்து பார்த்தபோது, ஆம்பல் பூ தண்ணிருக்கு மேலே தலை நீட்டிச் சிரித்துக் கொண்டு நின்றது.

“பூ அழுகவில்லை !” என்று மகிழ்ச்சியோடு கூவிக் குதித்தார்கள் குழந்தைகள்.

கருத்துரை :- நீர் எந்த அளவு நிற்கிறதோ, அந்த அளவு தான் ரோம்பல் பூவும் நிற்கும். ஒருவன் எந்த அளவு நூல்கள் கற்றிருக்கிறானோ, அந்த அளவுதான் அவனுடைய கூரிய அறிவும் அமைந்திருக்கும்.

ந. சி. II-4