பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—é இந்த நடத்தில் வருபவர்கள். ஒ மகாகவி ஆனந்தர். அன்பு நாட்டின் அருமைக் கவிஞர். வாய்மைக்கும், தூய்மைக்கும் இலக்கணம் தமது நாட்டின் பெருமையை நாடகங்களாகத் தொகுத்து மக்களை அறியாமை யினின்றும் எழுப்பி உண்மை பெறச் செய்கிறார். வயது 35 - நாடகத் துவக்கத்தில் 55 முடிவில். சிறையின் அவதியால் தோற்றத்தில் 70, மணிவண்ணன்... அரசகுமாரன் கவிஞரால் வளர்க்கப்பட்டு, சிலகாலம் அனாதையாகத் திரிந்து, கலைஞனாக வாழ்ந்து, மீண்டும் நாட்டை ஆளுகிறான். வயது 22 - சுகதேவன்... இTட்டின் படைத்தலைவன் காவல் அமைச்சன். தனிப்பட்ட ஆற்றலால், எதிர்த்து வரும் இடையூறுகளை வென்று நிற்கும் பெருவீரன். வயது 22. வீரசிம்மன். பிொம்மை மனிதன். அரச பதவியில் இருப்பவன். பெண் களுக்கு அடிமை! கயவர்களின் கைப்பாவையாகிறான். வயது 50. சர்வாதிகாரி... கொலைஞன். மண்வெறியன். தீமைகளின் இருப்பிடம். நாடு பிடிக்கும் நயவஞ்சகன். தானே கடவுள் என்று மக்களை ஏமாற்றும் தேசத்துரோகி. வயது 50.