பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சர்வா மணி சர்வா மணி சர்வா கவியின் கனவு பாக வேறு புறத்திலிருந்துவந்த காவலர்கள் மணிவண்ணனையும், சாத்தியையும் பிடித்துக் கொண்டதால், முகமூடியோடு ஓடிவிடுகிறாள்.) (மணிவண்ணனை விழித்துப் பார்த்து, ஏன், மாப்பிள்ளையவர்களே! விடிந்தால் ராஜகுமாரி யின் பக்கலில், இந்திரன் போல் வீற்றிருக்க வேண்டிய நீ ஏன் இந்த இரவில் இப்படித் தப்பியோடப் பார்க்கிறாய்? ஏன், இளவரசியை மணக்கக் கசப்பாயிருக்கிறதோ? வா! தாலிக் கயிறும் தூக்குக் கயிறும் கைக்கு வருவது விதி வசத்தால். அய்யா தமக்கு ஏனோ இப்பாவ மூட்டைகள்! பேசாதே! தெய்வ சம்மதம். அதை நிறைவேற்று வது என் கடமை. உன்னைக் காக்க வந்த முகமூடி வீரன் யார்? அது யாரோ. எல்லாம் நானறிவேன். புறப்படு. எல்லாம் சுகதேவன் சூழ்ச்சிகள்; முதலில் அவனைத் தொலைக்கிறேன். (காசி முடிவு)