தமிழ்ச் செல்வம் இ. 23
முருகன் முதலிய தெய்வங்கட்குப் படையுதவிய பண்பும், அகலிகை பொருட்டு மேனி முழுதும் கண்பெற்ற கதையும் பழந்தமிழரிடையே நிலவின. பாலைக்குரிய தெய்வமான கொற்றவையை முருகனுக்குத் தாய் என்றும், அவளே எல்லாத் தெய்வங்கட்கும் பழையவள் என்றும் கூறுகின்றனர். தாருகன் உரம் கிழித்த தறுகண்மையும், எருமை வடிவில் வந்த அவுணனை வென்று சிறந்த வீறுடைமையும் அவள் செய்தியில் விளக்கம் பெறுகின்றன. வருணனாகிய நெய்தல் நிலத் தெய்வத்தைப் பற்றி ஒரு செய்தியும் பழந்தமிழ் நூல்களில் எவராலும் எவ்விடத்தும் கூறப்பட வல்லை. இச்செய்திகளை விழாக்காலங்களில் மக்கட்குக் காவியங் கூறியும் ஒவியம் காட்டியும் உரைப்போர் இருந்திருக்கின்றனர். இதனை,
“இந்திரன் பூசை இவள் அக லிகைஇவன்,
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு ஒன்றியபடி இதுஎன்று உரைசெய் வோரும்” உளர் எனப் பரிபாடல் பகர்வது காண்க,
இத்தெய்வங்கட்கெல்லாம் மேலாய் உலகு உயிர்களின் வேறாய் ஒன்றாய் உடனாய் நிலவும் கடவுள் நிலையில் சிவ பரம்பொருளை வைத்து அவன் வடிவத்தை, -
“பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன்” -
என்றும்,