பக்கம்:நாலு பழங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தையும் திருடர்களும்

23

"ஆமாம்; ஆந்தைக்கு விழி பெரியது. அது விழித்தால் பயமாக இருக்கும்."

"ஆந்தை விழிக்கிறது" என்று சொல்லிப் பார்த்துக் கொண்டது, குழந்தை.

"நரி பார்த்திருக்கிறாயோ?" அம்மாவின் கேள்வி இது.

"இல்லையே!"

"நாய் மாதிரிதான் இருக்கும். ஆனால் வால் புஸு புஸு என்று இருக்கும். நாயை விட வேகமாக ஓடும்."

"இங்கே நரி இருக்கிறதோ?"

"இங்கே யெல்லாம் இருக்காது. காட்டில் தான் இருக்கும்."

"ஓ! நரி ஓடும்; வேகமாக ஓடும்; இல்லையா?'"

"ஆமாம்."

"நரி ஓடுகிறது" என்று குழந்தை சொல்லிப் பார்த்தது.

அதோடு அம்மா அன்று சொல்லிக் கொடுப்பதை நிறுத்திக் கொண்டாள்.

குழந்தை அம்மா சொல்லிக் கொடுத்த நான்கு விஷயங்களைத் திருப்பித் திருப்பி யோசித்து அந்த நாலு பிராணிகளையும் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தது. "தென்னமரம் நிற்கிறது. பெருச்சாளி சுவரைப் பறிக்கிறது. ஆந்தை விழிக்கிறது. நரி ஓடுகிறது" என்று மனப் பாடம் செய்து கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/29&oldid=1084373" இலிருந்து மீள்விக்கப்பட்டது