பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தார்கள். அரசன் அவனைப் பார்த்துப், “நீ என்ன திருடினாய்?” என்று கேட்டான். பொய்க் சொல்லக் கூடாது என்ற விரதத்தை மேற்கொண்டதால் மாடசாமி நடந்தது நடந்தபடியே கூறினான். அரசன், “ஏன் ஒன்றை மாத்திரம் வைத்து விட்டாய்?” என்று கேட்டான். மாடசாமி, “எனக்கு ஒன்றும் என் நண்பனுக்கு ஒன்றுமாக இரண்டை மாத்திரம் எடுத்தேன். மீதி ஒன்றை வைத்து விட்டேன்” என்றான்.

அரசன் உள்ளே போய்ப் பார்த்து ஓர் இரத்தினம் அங்கே இருப்பதைக் கண்டான் திருடனாக இருந்தாலும் மாடசாமி பொய் சொல்லாமல் இருந்ததைக் கண்டு அரசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆதலால், மாடசாமியைப் பார்த்து அரசன் “அப்பா, நீ இன்றோடு இந்தத் திருட்டுத் தொழிலை விட்டு விடு என்னுடைய அரண்மனையில் உனக்கு ஏதாவது வேலை தருகிறேன். கௌரவமாக நீ வாழலாம்” என்றான்.

மாடசாமிக்கு இது பெரிய வரமாக இருந்தது. சாமியார் செய்த உபதேசத்தின்படி பொய் சொல்லாமல் இருந்ததனால் தான் தனக்கு இந்த நிலை கிடைத்தது என்று அவரை, நனறியுடன் நினைத்தான். பொய் சொல்லாமையினுடைய பெருமையை அவன் நன்றாக அறிந்து கொண்டான்.