பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


கொடுப்பதுதான் நியாயம், சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்குக் கொடுப்பது பைத்தியக்காரத்தனம்?” என்று எண்ணி, அதை ஆத்திரத்தோடு அடித்தார். “சும்மா இருக்கிற சாமியாரகுக்குச் சோறு இல்லை” என்று சொல்லிவிட்டார்.

புதிய தர்மகர்த்தாவிடம் பழைய வழக்கத்தை வற்புறுத்தும் தைரியம் ஒருவருக்கும் வரவில்லை. “சாமியார் மிகவும் பெரிய மகான். மௌனமாக இருக்கிறார். அவருக்குப் பிரசாதம் அளிக்காவிட்டால் பாவம்” என்று எல்லோரும் கிசுகிசுஎன்று


பேசிக்கொண்டார்கள். ஆன்ரல் ஒருவரும் தர்மகர்த்தாவை அணுகிச் சொல்லவில்லை. கடைசியில்