பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14 திருக்குறள் விளக்கு

கருவிலே திருவுடைய கவிஞர்கள் ஆளும் ஆயிரம் உத்திகளில் எதையும் இவர் விடவே இல்லை."

குரல் அ: இந்தப் பண்பைத் திருவள்ளுவ மாலையில் கபிலர் என்னும் புலவர் ஓர் உவமையுடன் முன்பே சொல்லிவிட்டார். .

வேறு குரல்: (பாடுகிறது.) தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்-மனைஅளகு வள்ளை க்கு உறங்கும் வளநாட-வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி.? .

குரல் அ : வள்ளுவனாருடைய வெள்ளைக் குறட்பா, அதாவது குறள்வெண்பா தினையளவு போதாச் சிறுபுல் நீராம். காலை நேரத்தில் சிறிய புல்லில் சிறுமுத்துப்போல நிற்கிறதே, அந்தப் பனித் துளியைத்தான் சொல்கிறார். உருவத்தில் அது சிறியதாக இருந்தாலும், அதற்குள்ளே அருகில் உள்ள பனையின் முழுவடிவமும் தெரிகிறதல்லவா ? சிறிய துளியில் பெரிய பனை குறட்பாவை விரித்தால் அந்தப்பொருள் அந்தப் பனைபோல விரியுமாம். பனைமட்டுமா? இன்னும் பெரிதாகக்கூட விரியும். அடுத்த பாட்டில் பரணர் என்ற புலவர் இந்த விரிவுக்கு வேறு ஓர் உபமானத்தைச் சொல்கிறார்,

1. It is within the compass of these sever, feet that our author has compressed some of the profoundest thoughts that have ever been uttered by man. And how like a roaster he plays on this tiny instrument Sparkling wit and humour, the pointed statement, fancy, irony, the native question, the picturesque simile, there is not one of these and others of the thousand tricks of the born artist that our author has not employed in this perfect masterpiece of art.

. -V. V. S. Αiyar, Ρrefαce tο the Κural. 2. திருவள்ளுவ மாலை,5.