பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்ப்பொலிவேடு! 45 சைவ சமயக் கொள்கையை மேற்கொண்டு ஒழுகுபவர் சைவரானால், சைவம் என்பது யாது? “சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது" என்றார் திருமூலர். சிவம் என்பது எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்குத் தென்னாட்டுத் தமிழர் இட்டு வழங்கிய பெயர். "தென்னா டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற இத்தொடர்கள் மேற்கூறிய பொருளை வற்புறுத்தி நிற்பதைக் காணலாம். இந்தச் சிவத்துக்கும் உயிர்களுக்கும் உள்ள சம்பந்தம் (தொடர்பு) சைவம், சிவத்துக்கும் உலகத்துக்கும் உள்ள தொடர்பு சைவம், உயிர்களுக்கும் உலகத்துக்கும் உண்டாகும் தொடர்பு சிவத்தால் உண்டாக்கப்படுகிறது; அதனால் அத்தொடர்பும் சைவமே, இம்மூவகைத் தொடர்புகளையும் எடுத்தோதி மக்களை வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வ வாழ்வு பெறுவிப்பது சைவ சித்தாந்தம் என்பது முதலில் நினைவிற் கொள்ளவேண்டிய தொன்று. . х சிவமென்னும் செம்பொருள் உருவமுடைய பொருளன்று; அருவமும் அன்று அருவுருவமும் அன்று. அதற்கென ஒரு பெயரும் இல்லை. குணமும் இல்லை. கட்டுறுவதும் பின்பு கட்டிலிருந்து நீங்குவதாகிய வீடுபேறும் அச் சிவத்துக்கு இல்லை. சிவத்தைவிடப் பெருமை மிக்க பொருளும், துண்மையான பொருளும் இல்லை; பெருமைக்கும் நுண்மைக்கும் சிவமே எல்லை. பேரறிவு வடிவே சிவம் என்னலாம். சிவம் இன்பமேயானது. எங்கும் எப்பொருட்கும் சிவமே முதன்மையும் தலைமையும் உடையது. ஒளிமயமான அருளாற்றலை யுடையது இச்சிவ முதற் பொருள். அவ்வாற்றல் அழிவில்லாதது; ஓங்கியுயர்ந்து எங்கும் நிறைந்திருப்பது; சிவமும் அந்த அருளாற்றலோடு நீங்காமல் கூடியிருப்பதாகும். சிவமாகிய முதற்பொருள் மற்ற உயிர்ப்பொருளையும் உலகப் பொருளையும் நோக்க வேறாக இருப்பினும், அவைகளோடு ஒன்றாயும் உடனாயும் விரவி இருப்பது, உயிரும் உலகும் தத்தமக்குரிய தொழிலை ஒழுங்குவழுவாமல் செய்வதற்குச் சிவ. முதற்பொருளே காரணமாகும். உயிர்கள் தத்தம் தொழிலாகிய வினைகளைச் செய்து பயன்களை நுகர்ந்துகொண்டே வந்து பக்குவப்படும்போது, சிவமாகிய செம்பொருள் உண்மையறிவு விளங்கச் செய்து வீடுபேற்றினை எய்துவிக்கும். இக்கருத்தையே, “அருவுருவம் குறிகுணங்கள் முதல்.ஈறு கட்டுவீடு அனைத்தும் இன்றி • பெருமையதாய் நுண்ணியதாய்ப் பேருண்ர்வாய ஆனந்தப் பிழம்பாய் எங்கும்