பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தேனும் வேம்பும்

ரு வண்டும் காகமும் வழியில் சந்தித்துக் கொண்டன.

வண்டுத் தம்பி! எங்கிருந்து வருகிறாய்” என்று கேட்டது காகம்.

"சோலையிலிருந்து” என்று பதிலளித்தது. வண்டு.

சோலையிலிருந்தா ? நானும் அங்கிருந்து தானே வருகிறேன். உன்னைக் காணவில்லையே ! நீ அங்கு என்ன செய்து கொண்டிருந்தாய் ?” என்று வினவியது காகம்.

"காக்கையண்ணா, சோலையிலே பூஞ்செடிகள் இருக்கின்றனவே, அந்தப் பக்கம்தான் நான் இருந்தேன். பூக்களிலே இருந்த தேனை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தேன்” என்று கூறியது. வண்டு.

தேனா ? அது எப்படியிருக்கும் ?’ என்று. கேட்டது காகம்.

தேன் என்றால் உங்களுக்குத் தெரியாதா ? தேன் என்று சொல்லும்போதே இனிப்பாக இருக்கிறதே. அது கூடத் தெரியவில்லையா ? தேன் மிக