பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு காணப்படும். இவற்றுட் பொது விலக்கணத்தால் அறிவதை விடுத்துச் சிறப்பிலக்கணத்தால் அறிவதைத்தான் மெய்ஞ்ஞானம், உண்மைஞானம், என்று கூறுவர். இந்த ஞானம் பெறற்கரிய பெருஞானமாகும். இந்த ஞானம் வாய்க்கப் பெற்றவர்கள் மலக்கட்டினின்றும் நீங்கிச் சிவானந்தப் பேரின்பத்தை நுகர்வார்கள். அவர்களை இந்நிலையில் விட்டு நீங்கும் மலத்தின் ஆற்றல் அழிவது கிடையாது; இறைவன் அருளாற்றில் அழுந்திவிடுமாதலால் மீளவும் வந்து உயிர்களைப் பற்றுவதும் கிடையாது. - இதுவே, "திரிபுணர்வுபொதுமாற்றிச் சிறப்பியல்பால் உணர்ந்தெண்ணித்தெளிந்துதேறும் அரியபெறல் சன்மார்க்கஞானநிலை இதுகிடைத்த அறிவால் மிக்கோர் பெரியமலப்பிணியவிழ்த்துச் சிவானந்தப் பெரும்பேறுமருவிப்பாசம் இரிவது உம் புகுவதுTஉம் இன்றியொரு நிலையாம் அவ்வியல்புதன்னில்” என வருகிறது - இவ்வாறு உண்மைஞான வொழுக்கத்தால் கட்டற்ற உயிர் அறிவு வடிவாய்ச் சிவமுதற் பொருளைச் சேர்ந்து நிற்குங்கால், அறிவானும் அறியப்படு பொருளும், அறியும் அறிவுமாகிய மூன்றாகப் பகுத்தறியவாராமல், அறியப்படும் பொருளேயாய் அதனுள் அழுந்திநிற்கும் நிற்குங்கால் அதன் நிலை கண்ணொளியும் ஞாயிற்றொளியும் போலவும், நீரும் அதன் நிழலும் போலவும் நெருப்பும் அதனோடு கலந்து வெந்து சிவந்து நிற்கும் இரும்பும் போலவும், நீரும் உப்பும்போலவும், ஞாயிற்றொளியும் விண்மீனொளியும் போலவும் ஒன்றாதலும் வேறுதலும் இன்றி ஒன்றி உடனாய் நிற்கும் நிலையாகும். இதனையே அத்துவித நிலையென்று நம் சைவ சித்தாந்தம் கூறுகிறது. இந்த நிலையினைப் பெற முயலும் அன்பர்கள் உள்ளத்தில் இறைவன் திருக்கோயில் கொள்வான். இதனைக் குறிக்க வந்த சிவஞான முனிவர் "உணர்பொருளும் உணர்வானும் உணர்வும் எனும் பகுப்பொழியா தொழிந்துபானும் புணர்விழியும் நீர்நிழலும் தியிரும்பும் புன்லுவரும் பரிதிமீனும்