பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாரா. நாச்சியப்பன் 61

சிறிது நேரம் சென்ற பின், கிழவி திரும்பி வந்தாள். ஆனால், சென்றபோது இருந்த களை அப்போது அவள் முகத்தில் இல்லை. முன்னிலும் வாடித் தளர்ந்த முகத்துடன் அவள் திரும்பி வந்தாள்.

“என்ன ஆச்சு?” என்று கேட்டான் பாண்டியன்.

“அவனா அறம் செய்கிறான் ? எல்லாம் வெளிப் பகட்டு. இரவிலே யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டானாம். பகலிலேதான் கொடுப்பானாம் ; அதுவும் வீட்டிலே கொடுப்பதே வழக்கம் இல்லையாம் ! கோயில் வாசலிலேதான் கொடுப்பானாம் !” என்று கூறிச் சலித்துக் கொண்டே உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டாள் கிழவி.

அவள் மூச்சு விடும் வேகத்தை விட, இதயம் அதிக வேகமாகத் துடித்தது.

உடனே அந்தப் பெண்ணை மருத்துவர் வீட்டுக்குக் கொண்டு போக வேண்டும். “அம்மா, சிறிது நேரம் இருங்கள். எங்காவது போய் வண்டி கிடைக்கிறதா என்று பார்த்து வருகிறேன்,” என்று கூறிவிட்டுக் கிழவியின் பதிலுக்குக் காத்திராமலே வெளியில் வந்தான் மன்னன்.

அதே நேரம், அந்தத் தெரு வழியாக ஒர் இரட்டை மாட்டு வண்டி வந்து கொண்டிருந்தது. பாண்டியன் அந்த வண்டிக்காரனை நிறுத்தினான்.