பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரிக்கு நிகரானவன்

பாண்டிய மன்னனின் அரசவைக்கு ஒரு புலவர் வந்திருந்தார். அவர் எங்கோ வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார். பாண்டியனைப் போற்றி அவர் ஒரு கவிதை எழுதிக் கொண்டு வந்து படித்தார்.

அவர் கவிதையின் பொருள் பாண்டியன் மனதைத் தொடவில்லை. அவைப் புலவர் பக்கம் திரும்பினார். கவிதை நன்றாக இல்லை என்று பொருள்படும்படி இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினார், அவைப் புலவர்.

சிவபிரானே பாண்டியனாகப் பிறந்து இந்த உலகத்தைக் காத்து வருவதாகக் கவிதையில் கூறப்பட்டிருந்தது.

பாண்டியனின் வீரம், கொடை முதலிய பண்பு களைப் போற்றி வாழ்த்திப் பாடப் பெற்றிருந்தது. அந்தச் செய்யுள்.

பாண்டியன் அந்தப் புலவருக்குப் பத்துப் பொன் பரிசு கொடுக்கும்படி கட்டளை பிறப்பித்தான். புலவர் பெருமகிழ்ச்சியுடன் பொன்னை வாங்கிக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.