இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13
அவனால் நிறைய வரும்படி கிடைத்தது. அவனுடைய தண்டி மூக்கே இப்பொழுது அவனுக்குப் புகழ் வரும்படி செய்வதை உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தான், அவன் ஒன்றுந் தெரியாத பழைய தண்டி மூக்கன் இல்லை. இப்பொழுது அவன் வேடிக்கை செய்வதில் புதிய புதிய முறைகளை நாள்தோறும் கற்பனை செய்வான். அதற்கு அவனுடைய தண்டி மூக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.