பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பாரதிதாசன்


கம்பனும் பாடி வைத்தான்
        கவிநயம் சொட்டச் சொட்ட
என்பவர் தாமும் பொய்யே
        எழுதினா னென்று சொல்வார்!
நம்புதற் கியலாப் பாதை
        நடப்பதில் உள்ள கேட்டை
மன்பதைக் கெடுத்து ரைத்தோன்
        பாரதி தாச னன்றோ?

இடைக்காலப் புலவ ரெல்லாம்
        இறைவனைப் பாடி மெய்யாய்
நடக்காத கதைக ளெல்லாம்
        நாடியே எழுத லானார்
துடிக்காத உளந்து டிக்கத்
        தோன்றிய இந்தப் பாதை
நடக்காமற் புதுமை கண்டோன்
        பாரதி தாச னன்றோ?

பாரதி பாடி வைத்த
        பார்ப்பானை எனத்தொ டங்கும்
நேரிய கவிதை யெல்லாம்
        நினைத்தவா றழித்து விட்டார் !
பாரதி தாசன் தோன்றிப்
        பாடிடும் புரட்சி கண்டு
காரியச் சூழ்ச்சி வல்ல

        கயவரு மயர்ந்து போனார் !