பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டியிலே பொங்கல்
பால்மணக்கும் பொங்கல்
எத்திசையும் இன்பம்
எங்கும் பொங்கும் பொங்கல்!

பொங்கலோ பொங்கல்

எழுந்திரு கண்ணே

எழுந்திரு கண்ணே எழுந்திரு
இன்னுமோ துாக்கம் எழுந்திரு
பொழுது விடிந்தது எழுந்திரு
புதுவாழ் வுறவே எழுந்திரு

இறைவனைத் தொழுதே எழுந்திரு.
இளநகை செய்தே எழுந்திரு
உறுதியாய் ஓங்கவே எழுந்திரு
உயர்வெலாம் பெறவே எழுந்திரு.

61