பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28 சிவனும் பெருமாளும் போற்றும் செந்தமிழ் அரசு பொதுமொழியால் ஆட்சிபெற மக்கள் உரைபழகத் தாய்மொழியும் உண்டே !-வரிசையுறு முத்தனைய பல்லாய், மொழிதான் அரசிழந்தால் எத்தனையும் முன்னேருதே ! திருக்கோயில் தெய்வங்கள் பேணுத் தமிழை விருப்போடு கொள்ளவா வேண்டும்?-சிரிப்போ(டு) உயிர்வாங்கும் செந்தேனே யொண்டமிழ்பின் குேடி மயலாளுன் அப்பெரு மாள் ? உமைநத்தும் செஞ்சடையா ைேதிக் களிப்ப தமைவுற்ற ஆரியத்தை யன்ருே ?-சமைவுற்ற பொற்சிலையே தேவாரம் போற்றி நடமிட்டான் சிற்றம் பலத்தே சிவம் ! செந்தமிழை விட்டுச் சிவனும் பெருமாளும் இந்தநாள் வேற்றுமொழி யேற்றதேன் ?-மந்தநன்க முன்னளே சாதி வகுந்திட்ட மேற்படியார் இக்காளே செய்தாரிடர் ! செந்தமிழர் நாட்டுத் திருக்கோயில் அத்தனையும் எந்தநாள் இன்தமிழை ஏற்குமோ ?-அந்தகமாய்ப் பக்திசெயும் அன்பர் பகுத்தறிவை மேற்கொண்டால் அக்கணமே மானே அறி! பகுத்தறிவை மேற்கொண்டால் பக்தி மறைந்து மிகுத்திங்கு நாத்திகமோ மேவும் ?-தொகுத்த மலர்க்கொண்டைக் காரிகையே வாலறிவன் நற்ருள் தலைக்கொண்டால் நாத்திகமா சாற்று ! _