பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“இசையே, எல்லையில்லாத இன்பம் உன்னிடத்திலே எப்பொழுது பிறக்கிறது?”


“எனது தாய் தந்தையராகிய சுதியும் லயமும் வகுத்த எல்லையைக் கடவாது நிற்கின்றபோது பிறக்கிறது.”


வாழ்க்கை ஒரு பாலம். அதன் ஒரு முனை இந்த உலகத்திலிருக்கிறது; மற்றொரு முனை சுவர்க்கத்திலிருக்கிறது.

இந்தப் பாலத்தின் நேர் வழியைப் பின்பற்றாதவர்களும், குறுக்கே சென்றவர்களும் பிறவியாற்றினில் விழுந்து தடுமாறுகிறார்கள்.

45