இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
ஆறுகள் எல்லாம் எனக்குத் தண்ணீர் வழங்குவதற்குத்தான் இருக்கின்றன என்று நினைக்க வாய்க்கால் ஆசைப்படுகிறது.
பெயரில்லாத ஒரு மலரைத் தனக்கு உறவு என்று ஏற்றுக்கொள்ளச் சூரியகாந்திப்பூ நாணியது.
சூரியன் எழுந்தான் ; அந்தப் பெயரில்லாத மலரைப் பார்த்து, “என் அன்பே, நீ சுகமா?” என்று கேட்டுக்கொண்டே புன்முறுவல் செய்தான்.
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
29