பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


குழந்தை:
“குருவீ குருவீ கூடெங்கே?
கொஞ்சிப் பேசுங் குஞ்செங்கே?”

குருவி:
"மறைவாய் ஆங்கோர் கூரையிலே
வைக்கோல் கொண்டொரு கூடுசெய்தே
பஞ்சும் இறகும் போட்டதிலே
பாங்காய் மெத்தையும் செய்தங்கே
குஞ்சுகள் ரண்டையும் காத்திடுவேன்
கூட்டின் பக்கம்நீ போகாதே":

குழந்தை:
"குருவீ குருவீ சொல்எனக்கே
கூடும் குஞ்சும் எங்கென்றே"

12