பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சின்னஞ் சிறு மணிப் பூவே
சிங்காரம் செய் தெழுவாய்
இன்னல் தரும் பனியெல்லாம்
இல்லை இனித் தொல்லையில்லை;.
நல்ல வெய்யில் சிரித்திருக்கும்
நாளும் வந்து சேர்ந்ததுவே
மெல்லிசையில் குயில் பாடும்
விளையாடித் தென்றல் வரும்
பொங்கும் எழில்புது வசந்தம்
இங்கு வந்து நடனமிடும்
தங்கிய நல் லின்பம் வளர்
தருணமிது காணாயோ
சின்னஞ் சிறு மணிப் பூவே
சிங்காரம் செய் தெழுவாய்.

52