பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தோ உன்றன் துயரம் கண்டும்
மறைந்திருப் பேனோ
அழகுக் கொன்றை உருவம் நீங்கி
முன்னால் தோன்றிடுவேன்

ஆகா கடவுள் அருள் என்றெண்ணி
எடுத்துக் கொஞ்சிடுவாய்
அற்புதம் அற்புதம் இறைவன் கருணை
என்றே பாடிடுவாய்
பாகாய் உருகும் உன்றன் உளத்தைப்
பார்த்துன் குழந்தை நான்
பண்ணிய புண்ணியம் பெரிதென்றெண்ணி
வந்தனை செய்திடுவேன்.

20