பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூனை :

கொண்டைக்குருவீகொண்டைக்குருவீ
கோபங் கொள்ளாதே
கூவுங்கோழியின் குஞ்சுக்கிங்கே
தண்ணீர் தேடி வந்தேன்

குருவி:

பூனையாரே பூனையாரே
புன்னைமரத்தின் மேல்
பொங்கியே ஊற்று வருவதுமுண்டோ
அதிசயம் அதிசயமே!

பூனை:

கொண்டைக்குருவீகொண்டைக்குருவீ
கோபங் கொள்ளாதே
கூடியேநாமும் ஆடலாம்என்றே
கூப்பிட வந்தேனே

குருவி:

பூனையாரே பூனையாரே
வணக்கம் ஐயாவே
புரிந்துகொண்டேன் இனிமேல்
நில்லேன் போய்வருகின்றேனே.

20