இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அத்தை அத்தை என்றிடும்
எத்தன் நீயும் அல்லவோ?
சுத்தப் பொய்யன் என்பதை
நித்தம் நானும் கண்டுளேன்.
முதுகுக் கூடு போதுமே
மூன்று மாடி எதற்கடா?
உதவி யந்தக் கூடுதான்
ஓடிப் போடா மூடனே.”
நான் சிங்கம்
அம்மா சிங்கம் நான்தானாம்
ஆட்டுக் குட்டியும் நீதானாம்
சும்மா கர்ஜனை செய்திடுவேன்
சுற்றிலும் பார்த்துநீ கதறிடுவாய்.
பாய்வேன் நானுன் முதுகின்மேல்
பயப்பட வேண்டாம் விளையாட்டே!
தாய்மேல் என்றும் அன்புசெயத்
தவறிடு வேனோ சொல்லம்மா?
27