இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32
அது விடுதலையாகி ஒரு மாதம் இருக்கும். ஒரு நாள் மாந்தோப்பின் நடுவில் பல சிட்டுக் குருவிகள் கூடி இரை கொத்திக்கொண்டிருந்தன.
அப்போது அங்கே ஒரு நல்ல பாம்பு தரையில் ஊர்ந்து வந்தது.
அதைக் கண்டவுடன் எல்லாச் சிட்டுகளும் பறந்து சென்று மரக்கிளைகளில் உட்கார்ந்து கொண்டன. இந்தச் சிட்டு மட்டும் தரையில் நின்றது.
பாம்பு அதை நோக்கி நகர்ந்தது. அது தத்தித் தத்தி ஓடியது.
மரக்கிளையில் இருந்த சிட்டுகள் “பற, பற” என்று கத்தின.
இந்தச் சிட்டு பறக்க முயன்றது. அதற்குப் பறக்க வந்து விட்டது.
வியப்புடன் அது இறக்கை விரித்துப் பறந்தது. மரக்கிளை யொன்றில் போய் அமர்ந்து கொண்டது.
அந்த ஒரு மாத காலத்தில் வெட்டிவிட்ட அதன் இறக்கை வளர்ந்துவிட்டிருந்தது. இதை