பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

41

இந்த உளைச்சேற்றை, ஏறாத ஆழத்தை
எந்தவிதம் நீங்கி நமை எதிர்ப்பார்? இன்னமும்
சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத்
தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி
ஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச்
சாறற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப
பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கியே அந்தக்
கற்கள் கடவுள்களாய்க் காணப்படும் அங்கே!
இந்த நிலையில் சுதந்திரப் போரெங்கே?
கொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்ப
தெங்கே?

கல்வியறிவு, பகுத்தறிவு, சிந்தனாசக்தி சிறிதும் இல்லாத மக்கள் எடுப்பார் கைப்பிள்ளையாய் எது நன்மை எது தீமை என்று தெரியாதவர்களாய் மூடக்கருத்துக்களை நம்பிசுதந்திர சிந்தனை யில்லாமல் இருக்கும் வரையில் அன்னியரை எதிர்த்து விரட்டி உரிமை பெறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இந்தக் கருத்தைக் கூறிய ஆங்கிலேயன் மேலும் சொல்லுகிறான்.

தேகம் அழிந்துவிடும் சுற்றத்தார் செத்திடுவார்
போகங்கள் வேண்டாம்; பொருள் வேண்டாம்
மற்றுமிந்தப்
பாழுலகம் பொய்யே பரமபதம் போஎன்னும்
தாழ்வகற்ற எண்ணுங்கால் சாக்குருவி வேதாந்தம்!
சாதிப் பிரிவு சமயப் பிரிவுகளும்
நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்
மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே

ஒடச் செய்தால் நமையும் ஓடச்செய்வார் என்பேன்.

இவ்வாறு ஆங்கிலேயன் கூறி முடிக்கின்றான்.

கு-3