இருக்கிறது. நான் கண்டு பிடித்து விட்டேன்” என்று சுந்தரம் கத்தினான்.
“புதையலை அங்கே மறைத்துவிட்டு எதற்காக வரைபடத்தைக் குகையில் வைத்திருக்கிறான்?” என்று கேட்டாள் கண்ணகி.
'ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அதை நாம் உடனே விளங்கிக் கொள்ள முடியவில்லை” என்றான் தங்கமணி.
“புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும் வரை படம் நமக்குக் கிடைத்து விட்டது. அவ்வளவு தானே வேண்டியது?” என்றான் சுந்தரம்.
“ஏண்டா இப்படிக் கத்தினாய்? யார் காதிலாவது விழப் போகிறது” என்று கண்ணகி எச்சரித்து விட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
ஆனால் புதையல் இருக்கும் ரகசிய அறையைப் பற்றித் தெரிந்ததும் அவர்கள் உற்சாகம் மித மிஞ்சிவிட்டது. அதைப்பற்றி மாறிமாறிப் பேசிக் கொண்டே இருந்தார்கள்.
“இந்தக் கோடை விடுமுறை மிகுந்த குதூகலம் தருகிறது” என்று தங்கமணியும் உரத்துக் கூவினான்.
ஜின்கா ஜிங் ஜிங் என்று குதித்தது.
கண்ணுப்பாட்டி இரவு உணவு ஆறிப் போகிறது என்று அங்கு வந்து கூறாவிட்டால் அவர்கள் பேசிக் கொண்டே இருந்திருப்பார்கள். ஆனால் அவளிடத்தில் தாங்கள் கண்டு பிடித்த ரகசியத்தைப் பற்றிப் பேசவே இல்லை.
இரவு உணவு அருந்திவிட்டு, காலையிலிருந்து மலை ஏறி இறங்கிய அலுப்பால் மூவரும் உடனே தூங்கிவிட்டார்கள்.
37