இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27
இந்தச் சிட்டுக் குருவி மூலம் எனக்குச் சோறு போடுகிறார்” என்று பெருமையாகச் சொல்லுவான்.
இதைக் கேட்கும்போது சிட்டுக் குருவி அவனை வாயாரத் திட்டும். ஆனால் அது கிழவனுக்குப் புரியாது.
ஒரு நாள் பகல் நேரம் வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. சோதிடம் பார்க்க யாரும் வரவில்லை. கிழவன் வீட்டிலிருந்து கொண்டு வந்த கட்டுச் சோற்றைச் சாப்பிட்டு, வேப்பமரத்தடியில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
கிழவன் நன்றாகக் குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். சிட்டுக் குருவி தன் வாழ்க்கையை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது.
ஒரு சிறுபையன் அந்த வழியாக வந்தான். அவனுக்கு நெடுநாளாகச் சோதிடம் பார்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால் காசு கிடையாது.
அவன் கிழவனைப் பார்த்தான். கிழவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். சிறுவன்