பக்கம்:மாயக் கள்ளன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

83) சக்தி வரும்படி கடவுளிடம் வரம் கேட்கும்படி வள்ளிதாயகியின் காலில் விழுந்து வேண்டிக்கொண்டாள். வள்ளி நாயகியும் அவ்வாறே கடவுளை வேண்டினாள். பல முறை ஆதிலிங்கேசர் கோயிலுக்குப் போனாள். பல தேசங்களுக்கு யாத்திரை சென்று, அங்குள்ள கோயில்களி லெல்லாம் வணங்கினாள். ஆனால், ஆதிநாதன் மறுபடியும் பேசவே இல்லை. அவன் ஊமையாகவே இருந்தான். வள்ளிநாயகி ஒவ்வொரு கோயிலாகப் போய்க்கொண்டே இருந்தாள்.” இவ்வாறு சொல்லிவிட்டு மாயக்கள்ளன் திரும்பிப் பார்த்தான். ஆத்மரங்கன் மலையேறுவதை விட்டுவிட்டு மலைப்படியில் படுத்து நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். மாயக்கள்ளன் மகிழ்ச்சியடைந்தான். மறுபடியும் தனக்கு வெற்றி கிடைத்ததை அறிந்து சந்தோஷப்பட்டான். ஆத்மரங்கனைத் தூக்கிக்கொண்டு பழையபடி மலையடிவாரம் போய்ச் சேர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/86&oldid=1277011" இலிருந்து மீள்விக்கப்பட்டது