இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
86 என்ன நடக்கிறதென்று அவனுக்குத் தெரியவில்லை. அப்படி அவன் மனம் சிந்தனையில் மூழ்கி இருந்தது.
திடீரென்று ஒரு புதிய ஆயுதத்தை அவன் கண்டுபிடித்து விட்டான். அதனுடைய சக்தி இவ்வளவு தான் என்று யாராலும் சொல்ல முடியாது, அதை எதனாலும் வெல்ல முடியாது. அது ஒரு பெரிய பூதம் போல இருந்தது. அணுவரக்கன் அதற்கு விஞ்ஞான பூதம் என்று பெயர் கொடுத்தான். அந்தப் பூதத்தின் உதவியால் அவன் உலகத் திற்கே சக்கரவர்த்தியாக நினைத்தான். அந்த விஞ்ஞான பூதம் ஐந்து நிமிஷத்திலே உலகத்தை ஒரு தடவை சுற்றிப் பறந்து வந்துவிடும். அது போக