பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

காட்டு வழிதனிலே

இயற்கையே கவர்ந்து தன்னை மறக்கச் செய்கின்றதென நான் நம்புகிறேன.

மாலைப் பொழுதில் ஒருநாள் நான் கழனிகளிடையே செல்லும் ஒற்றையடி வழிதனிலே நடந்து கொண்டிருந்தேன். தனிமையைத் துய்ப்பதற்காக அவ்வாறு நான் அடிக்கடி செல்வதுண்டு. தனிமை என்றால் மானிடக் கூட்டம் இல்லை என்பதுதான் பொருள்; மற்றபடி நான் தனியாகச் செல்லுவதே இல்லை. காட்டு வெளியிலே எனக்கு எத்தனையோ தோழர்கள் உண்டு.

அழகாகப் பேசித் துணையோடு ஒய்யாரமாக இரை தேடி விட்டில் பிடித்து நடக்கும் மைனாக்கள், குடுகுடு வென்று ஓடிச் சிதறிக் கிடக்கும் தானிய மணிகளைப் பெறுக்கும் மணிப் புறாக்கள், வேலியின் மேலிருந்து அண்ணாந்து பார்க்கும் ஓணான், நீலமேனி விளங்க நீண்டு படுத்திருக்கும் மலை, சிறு சிறு கூழாங் கற்களே உருட்டி விளையாடி வரும் சிற்றோடை இவையெல்லாம் தனிமையை நன்கு துய்க்க எனக்குக் கிடைத்த தோழமைப் பெருஞ்செல்வங்கள். உயிர்ப் பரிணாமத்தின் உச்சியிலே இருக்கிற நம்முடைய இனம் மட்டும் கிடையாது. இயற்கையைத் துய்க்கச் செல்லுகிற இடத்திலும் பல மனிதர்கள் வாழ்க்கைச் சுமையையெல்லாம் மூட்டை முடிச்சோடு கொண்டு வந்து அவற்றைப் பற்றித் தொணதொணப்பார்கள். சிலர் கடற்கரைக்குச் செல்லுவார்கள். சுருண்டு சுருண்டு நிமிர்ந்து எழுந்து வெண்ணுரை மகுடமிட்டு மடங்கித் தடாரென்று விழுந்து சலிப்பின்றி, ஓய்-