பாரதியின் நகைச்சுவை
39
நகைச் சுவை ஆங்காங்கு மின்னுவதை நாம் பார்க்கலாம்.
அங்காந்திருக்கும் வாய் தனிலே-கண்ணன்
என்ற கண்ணன் பாட்டிலும்,
மேனி அழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி இருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே
என்ற குயிற் பாட்டு வரிகளிலும் நகைச்சுவை கொப்புளிக்கின்றது.
பாரதியாருடைய நகைச் சுவையை உணர்ந்து மகிழ அவருடைய வசன நூல்களுக்குத்தான் முக்கியமாகச் செல்லவேண்டும்; அங்குதான் அது சிறப்பாக வெளிப்படுகின்றது.
நகைச் சுவையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று என்றும் சிரிப்பை உண்டாக்கி இன்பம் பயப்பது; மற்றொன்று முதல் தடவை படிக்கும் போதோ அல்லது கேட்கும் போதோ மட்டும் இன்பங் கொடுப்பது. முன்னது உயர்த்தது; பின்னது தகுதியில் குறைந்தது. முன்னது இடையறாது பெருகும் தேன் ஒழுக்கு; பின்னது துளிக்கும் கொம்புத் தேனில் ஒரு சொட்டு. பாரதியாரின் கட்டுரைகளில் இடையறாத இன்ப ஊற்றான உயர்ந்த நகைச் சுவையை நாம் ஆங்காங்கு காண்கின்றோம்.
பெண் என்ற கட்டுரையிலே பிரமராய வாத்தியாரைப் பற்றி அவர் சொல்லுவதைப் பாருங்கள்;