20
காட்டு வழிதனிலே
யலாம். ஆனால், இந்த உயிர் இல்லாவிடில் அவள் வெறும் சடலந்தான்.
கவிதை பணங்குக்கு அணிகள் பூட்ட எத்தனையே பேர் காத்திருக்கிறார்கள்; உயிர் கொடுக்க வேண்டும்
என்பது என்னுடைய மாறாத ஆசை, அவளுக்கு நான் உயிர் கொடுக்க வேண்டும்; அவள் எனக்கு உயிர் கொடுக்க வேண்டும், நாங்கள் ஒன்றாகிவிட வேண்டும். இதுவே என் கனவு.
“காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம்
என்று பாரதி பாடுகிறான். கவிதை பெண் கடைக் கண்ணாற் பார்த்தாலும் போதும்; அற்புதங்களெல்லாம் செய்ய நான் காத்திருக்கிறேன்.
முழு நிலாவின் வெண் கதிர் வீச்சிலே ஒருகானம் பிறக்கின்றதை நீ அறிவாயா? கவிதைத் தேவியின் அருள் கிடைத்தவர்களுக்கு அந்தக் கானம் கேட்கிறது. நீலக்கடலின் கொந்தளிப்பிலே அவர்களுக்கு வெள்ளிப்பனிவரையின் உச்சியிலே வைகும் அமைதி தோன்றுகிறது!
அழகுகளை யெல்லாம் வடித்தெடுத்துக்கொடுக்க, உயர்வுகளை யெல்லாம் மனக்கண் முன்பு நிறுத்திக் காட்ட, இன்பங்களை யெல்லாம் திரட்டியளிக்க யாரால் முடியும்? அவளுடைய காதலைப் பெற்றவனே அவற்றைச் செய்கிறான். அவனுடைய சொல்லிலே ஒரு பாந்திர சக்தி குமிழியிட்டுக் கொண்டிருக்-