பக்கம்:இறைவர் திருமகன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

செருசலம் ஆலயத்திலே மக்கள் கூட்டம் காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இசையோடு கூடிய இறை விளக்கப் பாடல்கள் எங்கும் ஒலித்தன. புகைகளின் நறுமணம் எங்கும் சூழ்ந்தது. குருமார்கள் புத்தாடையணிந்து வந்திருந்து எல்லா மக்களுக்கும் தொழுகை நடத்தி வைத்தார்கள்.

விருந்து விழா நாட்கள் இன்பமாகவும் கேளிக்கையாகவும் கழிந்தன. வெளியூர்க்காரர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு ஒவ்வொருவராகவும், கூட்டங் கூட்டமாகவும் புறப்பட்டுப் போயினர். மேரியும் சோசப்பும் புறப்பட்டார்கள். இயேசு தன் நாசரத் தோழர்களுடன் வருகிறான் என்று அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். பகலெல்லாம் வழிநடந்து இரவு நெருங்கிய போது தான் அவர்கள் தங்கள் கூட்டத்தில் இயேசு இல்லை என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

அந்தக் கூட்டத்தில் வந்து கொண்டிருந்த இயேசுவின் நண்பர்களைக் கண்டு கேட்ட போது, அவனைப் பார்க்கவேயில்லையே என்று கூறிவிட்டார்கள்.