10
காட்டு வழிதனிலே
என்று தொடங்கும் பாரதியாரின் பாடல் அது. பாடிக் கொண்டிருக்கிறேன் என்கிற நினைப்பு உதயமானபோது,
ஆங்கப் பொழுதிலென் பின் புறத்திலே
என்கிற அடிகளை நான் உச்சரித்துக் கொண்கொண்டிருந்தேன்.
மாலைப் பொழுதிலே வானையும் கடலையும் நோக்கியிருந்த வேளையில் காதலியான கண்ணம்மா பின்புறமாக யாரும் அறியாமல் வந்து தம் கண்ணைப் பொத்துவதாகக் கற்பனை செய்து பாரதியார் அழகான கவிதை எழுதியிருக்கிறார்.
அவர் சட்டென்று கண்ணை மறைத்த கைகளைத் தீண்டினாராம்; அதே நொடியில் வந்தது யாரென்று அவருக்குப் புலப்பட்டுவிட்டது.
பாங்கினில் கையிரிரண்டும் தீண்டியறிந்தேன்
பட்டுடை வீசுகமழ் தன்னிலறிந்தேன்
ஓங்கி வளர் உவகை ஊற்றிலறிந்தேன்
ஒட்டும் இரண்டுளத்தின் தட்டிலறிந்தேன்
வாங்கி விடடிகையை ஏடி கண்ணம்மா
தனிமையிலே, காட்டு வழியினிலே இவ்வடிகளைச் சுவைத்துச் சுவைத்துப் பாடுகின்றபோது எனக்கு ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. என்னையும் அந்த எல்வையில் கட்டிப் பிடிக்க யாரோ பின்புறமாக வருகிறது போலத் தோன்றியது.