பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

காட்டு வழிதனிலே


செலுத்தாமலிருந்து விட்டோம் என்று சொல்லுவது தான் பொருந்தும். பெண்மையை நன்கு வளர்க்க நாம் கருதவில்லை. அதனலே உலகம் பெரியதோர் தீமையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. காட்டு மிராண்டியாக வாழ்ந்த ஆதி மனிதனுக்கும் இன்றைய 'நாகரிக' மனிதனுக்கும் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்ற கேள்விக்குப் பெட்னாட்ஷா ஒரு பொருள் பொதிந்த பதில் சொடுத்திருக்கிறார். அவர் சொல்லுகிறார்: 'ஆதிமனிதன் பிறரைக் கொல்ல நஞ்சு தோய்த்து அம்பைப் பான்படுத்தினான்; இக்காலத்து மனிதன் நச்சுப் புகையைப் பயன்படுத்துகிறான். அவ்வளவுதான் வேறுபாடு.' அவர் பேச்சு வேடிக்கை போலத் தோன்றினாலும் உண்மை நிறைந்தது. மனத்தன்மையிலே ஆதிமனிதனும் இன்றைய மனிதனும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். விலங்கு உணர்ச்சி மாறி நெஞ்சிலே இன்னும் தண்மை அதிகம் வளரவில்லே என்பது அவர் கருத்து.

உலகத்திலே ஒரு பெரிய கொடிய யுத்தம் முடிந்து இருபது ஆண்டுகள் கூட ஆகவில்லை. மற்றொரு பயங்கர யுத்தம் வெடித்துவிட்டது. அதுவுந்தான் முடிந்து விட்டதே என்று கூறலாம். உலக சமாதானத்திற்கும், உலக ஒற்றுமைக்கும் ஐக்கிய நாடுகளின் சங்கமும் திறந்துவிட்டதே என்றுகூடக் கேட்கலாம். ஆனால், சண்டை முற்றிலும் ஓய்ந்து விட்டதென்று யாரும் கூற முடியாது. பல பாகங்களிலே அது புகைந்து கொண்டிருக்கிறது. எப்பொழுது இது பெரு நெருப்பாக மறுபடியும் ஓங்கி விடுமோ என்ற கவலை உள்ளத்தைப் பீடித்துக்