பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

காட்டு வழிதனிலே


என்ன இருந்தும் இல்லாதது போலத்தான். இன்பத்தையும் வசதிகளையும் முன்னேற்றத்தையும் தேடி எவ்வளவு முயன்றாலும் இயற்கை தரும் அமைதி இல்லாதவிடத்து முழு வெற்றி கிடைக்காது. மேலும் திறந்த காட்டு வெளியினிலே தனியாகக் கால்போன போக்கில் திரியும் போது வாழ்க்கையிலே கசப்பூட்டும் சிறிய செயல்கள் மறந்து போகின்றன; உள்ளம் விரிந்து உயரப் பறக்கின்றது.

அதன் பயனாகப் பிறக்கும் அமைதியும் தெளிவும் இயற்கையோடு தனித்து உறவாடியவர்களுக்குத் தான் தெரியும். இவ்வளவு பெரிய இன்பத்தைப் பெற மக்கள் அனைவரும் முற்படவேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் அந்த மாலைப் பொழுதிற்கு நன்றி செலுத்தித் திரும்பினேன்.