100
காட்டு வழிதனிலே
போன்ற சொற்றொடர்களையும், அடிகளையும்படிக்குந்தோறும் படிக்குந்தோறும் தேன் ஊறுகின்றது.
செங்கழுநீர்ப் பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமையானது பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலிலே, காட்டு மல்லிகையாகிய படுக்கையிலே, தன் முதுகை மஞ்சள் இலை மெதுவாகத் தடவத் துயில்கொள்ளும் படியான சேர நாடு என்றும், உப்பு வாணிகர் வளர்த்த மந்திகள், மகளிர் பல்போன்ற முத்துக்களைக் கிளிஞ்லிவிட்டு அதைக் கிலுகிலுப்பைபோல ஆட்டிக் கொண்டு உப்பு வாணிகரின் பிள்ளைகளுடனே விளையாடும் கொற்கை என்றும், செந்தாமரைப் பீடத்திலே தும்பி தன் துணையுடன் துயின்று, பின் சீகாமரமென்னும் பண்ணைப் பாடிக்கொண்டிருக்கும் படியான சோழ நாடு என்றும் அவர் எழுதியிருப்பது மிக இனிமை வாய்ந்திருக்கின்றது.
மேலும், ஏழு வள்ளல்களின் கொடைப் பெருமையைச் சில அடிகளில் திறம்படக் கூறியிருப்பதும், தமிழ் வேந்தர்களைச் சொல்லாது அவர்களது மதுரை, வஞ்சி, உறந்தை என்னும் நகரங்களேயே குறித்து, ஆங்குப் பெறும் பரிசிலும் வறிதாகக் தோன்றும் என்று கூறும் சொல் நயமும் படித்து இன்புறற் பாலன.
இவ்வாறு சிறுபாணாற்றுப்படை நல்லியக் கோடனுடைய வள்ளன்மைமையும், நத்தத்தனார் கவித் திறமைைையயும் ஒருங்கே வெளியிடும் பாமணியாகத் திகழ்கின்றது.