பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63


வறுபட்டு விட்டதா? என்று சட்டியைப் பார்த்தது. அங்கே பொன்வண்டைக் காணவில்லை.

“முள்ளம் பன்றியே! உனக்கு நன்றி. எனக்கு விடுதலை கொடுத்ததற்காக நன்றி நன்றி” என்று கூறிக் கொண்டே திறந்திருந்த கதவு வழியாகப் பறந்து சென்று கொண்டிருந்தது பொன் வண்டு.

ஏமாந்து நின்று கொண்டிருந்த முள்ளம் பன்றி, விறகு வெட்டி குடிசை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து ஒடித் தப்பித்துக் கொண்டது.