பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

"நல்ல வேளையாக அந்தப் பாட்டைச் சொன்னாய். நான் கொஞ்சம் ஏமாந்து போய்விட்டேன்" என்று வருத்தப் பட்டான் சுந்தரம்.

"நடந்து போனதற்கு வருத்தப்பட்டு என்னடா செய்வது? சத்திரத்திற்குத் திரும்புவதற்கு வழியைப் பார்க்கலாம்" என்று கூறிக்கொண்டே தங்கமணி வேகமாக நடந்தான். கொஞ்ச நேரத்தில் அவர்கள் தாழிவயிறனை நோக்கித் திரும்பி வந்தனர். "இனிப் புறப்படலாமா?" என்று கேட்டான் தங்கமணி.

"புறப்படுவதா?" என்று கூறி நகைத்துக்கொண்டே திரும்பிப் படுத்தான் தாழிவயிறன். "அவர் எப்போது உத்தரவு போடுவாரோ அதுவரையிலும் எல்லாரும் இங்குதான் இருக்க வேண்டும். சாப்பிடக்கூட அவர் என்னை விடவில்லை. ரொம்பப் பசிக்குது" என்று முணுமுணுத்தான் தாழிவயிறன்.

கண்ணகிக்கு அழுகையே வந்துவிட்டது. ஆனால், தங்கமணி அவளுக்குச் சைகை காட்டித் தைரியப்படுத்தினான். மூன்று பேரும் மறுபடியும் தாழிவயிறனை விட்டு எட்டிச் சென்றனர். என்ன செய்வதென்று தங்களுக்குள் பேசிக் கொள்ளவே அவ்வாறு செய்தனர். அவர்கள் தனித்துச் செல்வதைப்பற்றித் தாழிவயிறன் கவலைப்படவில்லை. "பசங்க எங்கே போயிடுவாங்க. இந்தக் காட்டுக்குள்ளேதானே போக வேணும்? போனால் அவ்வளவுதான்" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டே தாழிவயிறன் நிம்மதியாகப் படுத்திருந்தான்.


5

"வனுக்கு நம்மேல் சந்தேகம் சிறிது ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கலக்கத்தில் அவன் வடநாட்டுக் காரனைப் போல் பேசுவதை விட்டுவிட்டு நம்மைப் போலப் பேசிவிட்டான்" என்றான் தங்கமணி.

"நாம் பரிசலில் ஏற மறுத்திருக்க வேண்டும்" என்று தனது கருத்தைத் தெரிவித்தான் சுந்தரம்.