பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 கையைப் பற்றியே பிராமணனுகி விடமாட்டான். அப்படி, பால்ை, யார்தான் பி ராம ண ன் ? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாதததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந் திருப்பதும், அளவிடக் கூடாதததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை, நேருக்குநேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களில்லா தவய்ை, பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கினவனுய், இடம்பம் அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்ச முடையவனுய் இருக் கின்ருனே, இங்ங்னம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி, ஸ்மிருதி, புராண, இதிகாச மென்பவற்றின் அபிப்பிராயமாகும். மற்றப்படி ஒருவனுக்கு பிராமணத்துவம் சித்தியாகாது என்பது உபநிஷத்து. பிராமணராக வேண்டுவோர் மேற்கூறப்பட்ட நிலைமையைப் பெற முயற்சி செய்யக் கடவர். கூத்திரி பர், வைசியர், சூத்திரர் முதலிய மற்ற லெளகிக வர்ணங் களுக்கும் இதுபோலவே த க் க வாறு லக்ஷணங்கள் அமைத்துக் கொள்க. அவ்வவ் விலக்கணங்கள் பொருந் தியவர்களே அவ்வவ் வருணத்தினரென்று மதிக்கத்தக்க வர்கள். அந்த இலக்கணங்கள் இல்லாதவர்கள் அவற்றை படைய முயற்சி செய்யவேண்டும். போலீஸ் வேவுத் தொழில் செய்பவன் பிராமணன் ஆகமாட்டான். குமாஸ்தா வேலை செய்பவன் கூத்திரியன் ஆகமாட்டான். சோம்பேறியாக முன்னேர் வைத்து விட்டுப் போன பொருளை யழித்துத் தின்பவன் வைசியன் ஆகமாட்டான். கைத்தொழில்களை யெல்லாம் இறக்கக் கொடுத்துவிட்டுச் சாற்றுக்குக் கஷ்மடைவோர் சூத்திரர் ஆகமாட்டார்கள். ர்களெல்லாம் மேம்பாடுடைய ஆரிய வர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீசக்கூட்டத்தார். நமது தேசம்