பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10] 參 ஆளும் சொல்லிக்கொண்டுதான் வருகிரு.ர். நிர்விகற்ப மாதியிலே அவர் இருப்பதை நான் பார்த்ததே கிடையாது. மேற்படி ராமராயர் இங்கிலாந்தில் இருக்கும்போது, ஐரோப்பியர் கண் பார்க்காமல் கை எப்படிச் சமைக்கும்? ராப்பியர் சமையல் பண்ணின பதார்த்தங்களை iர்ளொன்றுக்கு நான்கு முறையாகப் பத்து வருஷ காலம் நிர்விக்நமாக போஜனம் செய்துகொண்டு வந்தார். இந்த விஷயத்தில் அவர் மேலே அதிகக் குற்றம் சொல்ல இடமில்லை. ஐரோப்பாவில் ஐரோப்பியர் சமையல் பண்ணினதைத் தின்னமல் எப்படிப் பிழைக்க முடியும்? இங்கிருந்து பிராம்மணப் பரிசாரகர்களில் நூறு நூற்றைம்பது பேரைக் கொண்டு லண்டன் பட்டணத்தில் ஆடியேற்றினால், நம்மவர்கள் போய் ஜாதியாசாரங்களுக்கு விரோதமில்லாதபடி அங்கிருந்து படித்து வைதிகக் அலெக்டர்களாகவும் வைதிக பாரிஸ்டர்களாகவும் திரும்பி வா இடமுண்டாகும். ஸ்வாமி விவேகானந்தர் ஐரோப்பா திலும், அமெரிக்காவிலும் ஸஞ்சரித்த காலத்தில் பசுக்கறி முதலியவற்றை யதேஷ்டமாக சாப்பிட்டதாகப் பாதிரிகள் இந்தியாவில் கூக்குரல் போட்டதைப் பொறுக்க முடியாமல், சென்னப் பட்டணத்திலிருந்து சில வைதிக சிஷ்யர்கள் வருத்தப்பட்டு விவேகானந்தருக்குக் காயிதம் போட்டார்கள். அடுத்த கப்பலில் ஒரு வைதிக பரிசார ஒனும், வைதிக போஜனங்களும் இந்தியாவிலிருந்து ப்பினால், தான் வைதிகமாக உண்பதில் ஆக்ஷேபமில்லை iன்று விவேகானந்தர் மறுமொழி எழுதினராம்.) மராயர் இங்கிலாந்தில் போய்ப் பத்து வருஷ காலம் இருந்து வியாபாரம் பண்ணிவிட்டுக் கொஞ்ச காலத்துக்கு முன்பு, வேதபுரத்துக்குவந்து சேர்ந்தார். இங்கே அவர் கையில் கொஞ்சம் காசிருப்பதைக் கண்டு சில வைதிகர்கள்