இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குழந்தைச் சித்திரம்
55
பல குருவிகள் அமர்ந்திருப்பதைக் குறிப்பிட வேண்டுமானால் குந்தை சாதாரணமாக ஒன்றிரண்டு குருவிகளை மிகப் பெரியதாக மரத்தின் மேலே வரைந்து காண்பிக்கிறது.
இரண்டு வயதுக் குழந்தையிடம் ஒரு சிவப்பு வர்ணச் சுண்ணாம்புக் கோலைக் கொடுத்தேன். அது என்னவோ கோடுகள் மேலிருந்து கீழே தரையில் வரைய ஆரம்பித்தது. கிறுக்குவது போலத்தான் முதலில் தோன்றியது. இதுதான் குழந்தையின் முதற் சித்திரம். வரைய வரையக் குழந்தை அதற்கு ஒரு பொருள் கண்டு பிடிக்கத் தொடங்குகிறது.