பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கேள்விப் பட்டிருந்தால் இப்போது நீர் அதிகமாக ஸ்ந்தோஷமடைவீர். காளி : சரிதான். ஆனல் நீர் போன மாஸம் என்ன பார்த்தபோது ஜார் சக்ரவர்த்தியையும் அவருடைய மந்திரிகளையும் புகழ்ந்து பேசினதாக ஞாபகமிருக்கிறது. ஸ்ந் : ஒயாமல், ஹிந்துக்களைப் புகழ்ந்து கொன் டிருந்தால் நீர் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பீர் போன மாஸம் நான் ஜார் சக்ரவர்த்தியைப் புகழ்ந்த காரணம் வேறு. ராஜ்யத்தில் எத்தனை கஷ்டங்களிருந்த போதிலும், ரஸ்புதீன் மு. த லி ய துர்மந்திரிகளின் வார்த்தையைக் கேளாமல், அவர் நம்முடைய நேச ராஜ்யங்களின் விஷயத்தில் உண்மை செலுத்தி வந்ததன் பொருட்டாக அவரைப் புகழ்ந்தேன். இப்போது...... காளி : சரி; சரி; நிறுத்தும். வேறேதேனும் கதை சொல்லும் கேட்கிறேன். ஸ்ந் : ஏழெட்டு நாளேக்கு முன்பு நம்மூருக்கடுத்த பிள்ளைப்பட்டி யென்ற கிராமத்தில் ஒருவன் கோபத்தால் தன் மனைவி வயிற்றில் மிதித் தானும். அவள் செத்துப் போய் விட்டாளம். அந்த விஷபம் இப்போது போலீஸ் விசாரணையிலிருக்கிறதாம். நீர் கேள்விப்பட்டீரா? காளி ஆம். ஸந் : அதிலிருந்து, அந்தக் கிராமத்து ஜனங்க ளெல்லாம் ஆலமரத்தடியில் ஒரு கூட்டம் கூடி இனிமேல் யாரும் பெண்டாட்டியை அடிக்கக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டார்களாம். அது கிடக்கட்டும்: காளி தாஸ்ரே, உம்மிடம் நான் ஒரு முக்கியமான விஷயம் கலந்து பேசவில்லையோ? காளி : சங்கதியென்ன?