பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ? மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே, எண்ணிநின்ருர் தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல், கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம் மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும் கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ? ஆனவரையும் அவர் முயன்று பார்த்தாலும், பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும், மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம் ஆசை முகத்தினைப் போலாக்க முயன்றிடினும், ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்ருலும், வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே? ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ? பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு, கந்தைபோல்; வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ? வானரர் தம்முள்ளே மணிபோல உமையடைந்தேன், பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும் நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களில்ை தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்தி கொண்டேன்; தம்மிடத்தே, ஆவலிற்ை பாடுகின்றேன், ஆரியரே கேட்டருள்வீர்!"